பரிபாடல் - உரைச்சிறப்புப் பாயிரம்
ADVERTISEMENTS
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனி
முனைவேன் முருக னெனவிவர் முதலிய
திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த
சங்கமென்னுந் துங்கமலி கடலுள்
அரிதி னெழுந்த பரிபாட் டமுதம்
ADVERTISEMENTS
அரசுநிலை திரீஇய வளப்பருங் காலம்
கோதில் சொன்மக ணோதகக் கிடத்தலிற்
பாடிய சான்றவர் பீடுநன் குணர
மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற்
றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்
ADVERTISEMENTS
எழுதினர் பிழைப்பு மெழுத்துரு வொக்கும்
பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்
ஒருங்குடன் கிடந்த வொவ்வாப் பாடம்
திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற்
சிற்றறி வினர்க்குந் தெற்றெனத் தோன்ற
மதியின் றகைப்பு விதியுளி யகற்றி
எல்லையில் சிறப்பிற் றெல்லோர் பாடிய
அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்
சுருங்கிய வுரையின் விளங்கக் காட்டினன்
நீணிலங் கடந்தோன் றாடொழு மரபிற்
பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே
நேரிசை வெண்பா
விரும்பி யருணீல வெற்பிமயக் குன்றின்
வரும்பரிசு புள்ளுரு மாலே - சுரும்பு
வரிபாட லின்சீர் வளர்துளவந் தோளாய்
பரிபாட லின்சீர்ப் பயன்.