பரிபாடல் - 18. செவ்வேள்
ADVERTISEMENTS
கடவுள் வாழ்த்து
இமயத்தொடு நிகர்க்கும் குன்று
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,
சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து,
ADVERTISEMENTS
ஏறுமாறு ஏற்கும் இக் குன்று.
தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்
ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:
'உள்ளியது உணர்ந்தேன்; அது உரை இனி, நீ எம்மை
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு' என்பாளைப் பெயர்த்து, அவன்,
ADVERTISEMENTS
'காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்
பேதுற்ற இதலைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை
ஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு உணர்ப்பித்தல்
ஆய் தேரான் குன்ற இயல்பு.
பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும் தலைமகளின்
கூற்று
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல்,
முருகவேளை வாழ்த்துதல்
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
சுருதியும் பூவும் சுடரும் கூடி,
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,
கடவுள் வாழ்த்து
பாடியவர் :: குன்றம்பூதனார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம்